Thursday, January 18, 2024

சிந்திக்க சில நிமிடங்கள் - 1

இருமொழி திட்டம் (டி.எல்.பி) (DUAL LANGUAGE PROGRAMME [DLP] )



'டி.எல்.பி'  வேண்டும் என்று  அழுத்தம் கொடுப்பது பெற்றோர்களே.  மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால் பள்ளி நிர்வாகங்களும் அதை இப்பொழுது வரவேற்கத் தலைப்படுகின்றனர்.
பின் விளைவுகளை யாரும் சித்திப்பதாகத் தெரியவில்லை.






தரம்



'டி.எல்.பி'யினால்  பள்ளியில் கல்வித் தரம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


 
வீட்டில்  முதல் மொழியாக ஆங்கிலம் அல்லது ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் குழந்தைகளுக்கு அறிவியல் கணிதம் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் பொழுது ஓரளவு புரியும் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உள்ளுணர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துப் படிக்க வேண்டடிய பாடங்கள் அறிவியலும் கணிதமும். எனவே ஆங்கிலத்தில் படித்துக் கொடுத்தாலும் அறிவியல் கணிதத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை.
ஆங்கில மோகம் கொண்ட தரப்பினர்ளே ஆங்கிலத்தில் கணிதம் அறிவியல் பாடங்களைப் படித்துக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். 
'டி.எல்.பி'யினால் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கூடுதல் சரளம் காட்டுவார்கள். ஆனால் அறிவியல் கணிதப் பாடத்தில் அதனால் அவர்கள் கெட்டிக்காரர்களாய் வருவார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஆங்கிலத்தில் போதிக்கும் ஆசிரியர் அரைகுறை ஆங்கில அறிவு கொண்டவராக இருந்தால் அறிவியல் கணிதம் இரண்டிலும் மாணவர்கள் தரம் வீழ்ந்து விடும்.





















தமிழ் மொழி


'டி.எல்.பி'யினால் இதுநாள் வரை தமிழில் அறிந்து வைத்திருந்த அறிவியல் கணிதம் தொடர்பான அனைத்துக் கலைச்சொற்களும் காணாமல் போய்விடும். நமக்கு முன்னாடி இருந்த தலைமுறை பாடுபட்டு உருவாக்கிய கலைச்சொற்களை இழந்து ஆங்கிலத்தில் படித்தால் அறிவு பெருகும் வேலைகிடைக்கும் என்று முட்டாள்தனமாக நினைக்கும் பலரால் காத்திருக்கிறது தமிழுக்கு ஆபத்து. 
பாலூட்டி (mammals), சேங்கோணம்(right angle) போன்ற சொற்களை மறந்துபோய் அருங்காட்சியகத்தில் (museum) தேடிக் கொண்டிருக்கும் எதிர்காலத் தமிழ் தலைமுறை.











வேலை வாய்ப்பு



ஆரம்பப் பள்ளியில் தமிழில் எல்லாப் பாடத்தையும் படித்துவிட்டு விஞ்ஞானியாக, டாக்டராக, பேராசிரியராக, வழக்குரைஞராக, அக்கவுண்டனாக பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். 
ஆங்கிலத்தில் படித்துவிட்டு குப்பைக்கூட்டிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.








வேலை  வாய்ப்பு பெறுவதற்கு தேவை அறிவு. தமிழில் படித்திருந்தாலும் அறிவியலில் கெட்டிக் காரராக இருந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Tuesday, October 10, 2023

அச்சியில் மீண்டும் ஒரு பதிப்பு

 அச்சியில் மீண்டும் ஒரு பதிப்பு

22.09.2023.... திருமதி மாரியம்மாள் சூரிநாராயணன் அவர்களின் பணி நிறை மலரில் ஒரு படைப்பு ..... 


  

   

நன்றி......
தேசிய வகை குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி, 
நினைவு மலர் குழுவினர்க்கு .

Tuesday, October 3, 2023

சிந்திக்கச் செயல்பட- 3

சிந்திக்கச் செயல்பட - 3


நல்லதோர் வீணை செய்தே - அதை              நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 

சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
     சுமையென வாழ்ந்திட புரிகுவையோ? 

விசையுறுப் பந்தினைப்போல் - உள்ளம்
     வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்  கேட்டேன், - நித்தம்
    நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் 

    தசையினச் தீச்சுடினும் - சிவ
சக்தியினை பாடும் நல்லகங்  கேட்டேன்
    அசய்வறு மதி கேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந்  தடையுளதோ 



பாரதி வேண்டுவது:
சுடர்மிகு அறிவுடன் பிறந்துவிட்ட என்னால்  இவ்வுலகம் பயன் பெறவேண்டும். இல்லையேல் நான் பிறந்த இம்மண்ணுக்குச் சுமையாக இருப்பதில் அர்த்தமில்லை. அதற்கு நான் வேண்டியபடி செயல்பட மனம் கேட்கிறேன். அதைச் செயல்படுத்த உடல் வேண்டும், உயிர் வேண்டும்.  என் தசையினைத் தீச்சுடும் போதும் உன்னைப் பாடும் உள்ளம் வேண்டும். அதை அருள்வதில் உனக்கு ஏதும் தடை  இருப்பதற்கில்லை. என் வேண்டுதல் கிடைக்காதனில் நல்ல வீணையைச் செய்து அதைப் புழிதியில் எறிவது போலாகும்.

Tuesday, May 16, 2023

மலேசிய வாழ் அனைத்து ஆசிரியருக்கும் 
எமது ஆசிரியர் தின வாழ்த்துகள்
16.05.2023

2023 ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை.

இக்கவிதை என்னைச் செதுக்கியச் சிற்பிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்.