Tuesday, April 12, 2022

சிந்திப்போம் செயல்படுவோம் 2

அன்பு.....

அள்ளி அள்ளி கொடுக்கும் போது
அமிர்தமாக இருக்குமே!
கொடுப்பவருக்கோ பெருமை
பெற்றவருக்கோ அருமை
இருப்பினும்
ஏனோ 
என்றுமே  அமிர்தமாக 
இனிப்பதில்லையே
ஏன்....?
அமிர்தம் கூட 
ஒரு நாள் விஷமாக மாறுமோ....
விஷமாக மாறும் அன்பு என்ற 
அமிர்தம்
பெற்றவரை உடனே
கொன்றால் சிறப்பாகுமே...
கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் போது
என்ன சொல்வது...
அன்பு என்பது ..
ஓர் ஆயுள் தண்டனையோ....
பெற்ற நபருக்கு.......